Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மக்களுக்கான உதவிகள் தொடரும்!

Mar 18, 2021


COVID-19 பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்துள்ளார்.

வேலை இழந்த B40 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே தடவை 500 ரிங்கிட வழங்கப்படும்.

ஆயிரம் ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் BPR உதவிப் பெறுவோருக்கும் கூடுதலாக 500 ரிங்கிட் கொடுக்கப்படும்.

இந்த இரு உதவிகளும், 21 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த உதவிகளை பெற எந்த விண்ணப்பமும் செய்ய வேண்டியதில்லை என PEMERKASA வியூகத் திட்டத்தின் கீழ் பிரதமர் அறிவித்துளார்.

மக்களுக்கான உதவிகள் தொடரும்!

மற்றொரு நிலவரத்தில், COVID-19 தேசிய தடுப்பூசி திட்டம் வாயிலாக இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியாவில் கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் இலக்கை அடைய, அத்தடுப்பூசி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றாரவர்.

தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், இனி நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கொண்டு வரும் சாத்தியம் இருக்காது என்பதையும் பிரதமர் கோடி காட்டியிருக்கின்றார்.

அதற்கு பதிலாக, கொரோனா சீற்றம் இன்னும் குறையாமல் இருக்கும் பகுதிகளை மட்டும் குறி வைத்து, அங்கு நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கும் அணுகுமுறை பின்பற்றப்படும் என்றாரவர்.

அவ்வியூகத் திட்டத்தின் கீழ் பிரதமர் கோடிட்டு காட்டிய மேலும் சில அம்சங்கள்:

•           மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கின்றது.எனினும், அந்த அனுமதியை வழங்கும் முன், அதன் தொடர்பான தரவுத் தகவல்கள் நன்கு ஆராயப்பட வேண்டியிருக்கிறது.

•           SOCSO வாயிலாக gig பொருளாதார துறைச் சார்ந்தவர்களுக்கு, உதவித் தொகைகள் அறிமுகப்படுத்தப்படும்.

•           ஜிம் உடற்பயிற்சி மையங்கள், சுற்றுலா தொடர்பான வர்த்தகங்களுக்கு சம்பள உதவித் தொகை அறிமுகப்படுத்தப்படும்.

 

இன்று தடுப்பூசி போடுகிறார் அமைச்சர்!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மக்களுக்கான உதவிகள் தொடரும்!

அவர்களில் அதிகமானோர் சிலாங்கூர், பேரா மற்றும் சபா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 

தடுப்பூசி திட்ட ஒருங்கிணப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin, சீனா தயாரிப்பிலான Sinovac தடுப்பூசியை இன்று போட்டுக் கொள்ளவிருக்கின்றார்.


 

இந்தியா நிலவரம்...

இந்தியாவில் 2ஆம் கட்டமாக பரவத் தொடங்கியிருக்கும் COVID-19 சம்பவங்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் தேவை என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கான உதவிகள் தொடரும்!

கொரோனாப் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, உள்ளூர் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டியிருப்பதாக அவர், மாநில முதல்வர்களுடனான இணையம் வழி சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், 9 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வந்த தினசரி கொரோனா சம்பவங்கள், அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 29 ஆயிரம் COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாத  மத்தியில் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தில், இதுவரை 35 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather