Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஆசிரியர்களுடைய கடமை மட்டும் அல்ல!

Mar 20, 2021


 

அந்நிய தொழிலாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி - அரசாங்கம் ஆராயும்!

வரும் காலங்களில், அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதாக இருந்தால், அவர்கள் கட்டாயம் COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்படலாம்!

ஆசிரியர்களுடைய கடமை மட்டும் அல்ல!

அப்பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கும் என பொதுப் பணி அமைச்சு கூறியிருக்கின்றது.

தற்போதைக்கு நாட்டில் தடுப்பூசி திட்டம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு  வருவதால், அதன் கையிருப்பை கருத்தில் கொண்டு, அப்பரிந்துரையை உடனடியாக செயல்படுத்த முடியாது என அமைச்சு தெரிவித்தது.

போதுமான அளவு தடுப்பூசிகள் போடப்பட்டு, மீண்டும் புதிய கையிருப்பு கிடைக்கும் பட்சத்தில், புதிதாக வேலைக்குச் சேரும் அந்நிய தொழிலாளர்கள் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவ்விதிமுறை அமுலுக்கு வரலாம் என அமைச்சு கூறியது.

 

COVID-19 பரவலை தடுப்பது அனைவரது கடமை - NUTP

பள்ளிகளில் COVID-19 பரவலை தடுப்பது ஆசிரியர்களுடைய கடமை மட்டும் அல்ல!

மாறாக, அது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரையும் உட்படுத்தியிருப்பதாக தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP கூறுகின்றது.

ஆசிரியர்களுடைய கடமை மட்டும் அல்ல!

மாணவர்கள் பள்ளிகளில் சில குறிப்பிட்ட மணி நேரத்தை மட்டும் தான் செலவிடுகின்றனர்; எனவே, கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் பள்ளிகளை மட்டுமே சார்ந்தது என கூறுவது சரியில்லை என NUTP தெரிவித்தது.

பள்ளியில் இருக்கும் போது நிர்ணயிக்கப்பட்ட SOPகளை மாணவர்கள் முறையாக பின்பற்றுவதை ஆசிரியர்கள் உறுதிச் செய்கின்றனர்.

ஆனால் பள்ளி முடிந்ததும் மாணவர்களின் நடமாட்டம் பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதை NUTP தலைவர் Aminuddin Awang சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டில் சில பள்ளிகளில் COVID-19 சம்பவங்கள் பரவியிருப்பது குறித்து கேட்ட போது அவர் இக்கருத்தை பகிர்ந்துக் கொண்டார்.

ஆகக் கடைசியாக, Tampoiயிலுள்ள ஆரம்பப் பள்ளியும், Sibuவில் உள்ள இரு ஆரம்பப் பள்ளிகளும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
 

பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளும் திட்டம் இல்லை!

COVID-19 தடுப்பூசிக்கான அவசியம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளும் திட்டம் இல்லை என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

ஆசிரியர்களுடைய கடமை மட்டும் அல்ல!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே உட்படுத்தியிருப்பதே அதற்கு காரணம் என அமைச்சு தெரிவித்தது.

எனினும், கிராமப்புற மக்களிடையே தடுப்பூசிக்கான அவசியம் குறித்து வலியுறுத்த விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சு கூறியது.

அந்த இயக்கம், பள்ளிச் செல்லும் பிள்ளைகளை கொண்டுள்ள பெற்றோர்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும். 


COVID-19 நிலவரம்!

நாட்டில் நேற்று ஆயிரத்து 576 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 1996 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இம்முறை ஆக அதிமாக 407 சம்பவங்கள் சரவாக்கில் பதிவாகியுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather