Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாநிலம் கடந்து பயணித்ததால் வந்த விளைவு!

Mar 22, 2021


நாட்டில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், மக்கள் SOPகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு, சுகாதார அமைச்சு வலியுறுத்தியிருக்கின்றது.

அவசர தேவை இருந்தால் மட்டுமே, காவல் துறையின் அனுமதி கேட்டு, மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்குமாறு அமைச்சு மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.

மாநிலம் கடந்து பயணித்ததால் வந்த விளைவு!

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை, மாநிலங்கள் கடந்து பயணித்ததன் விளைவாக, மூவாயிரத்து 170 COVID-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.

அதில், மாநிலங்கள் கடந்து, கெடாவில் தான் ஆக அதிகமாக 714 கொரோனா  சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கடுத்து, பேரா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நாட்டில் நேற்று ஆயிரத்து 327 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, ஆயிரத்து 247 பேர் அத்தொற்றில் இருந்து மீண்டனர்.

இன்னும் 14 ஆயிரத்து 518 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

பள்ளிகள் அவசர அவசரமாக மூடப்படாது!

COVID-19 தொற்று அடையாளம் காணப்படும் பள்ளிகள் அவசர அவசரமாக மூடப்படாது!

மாநிலம் கடந்து பயணித்ததால் வந்த விளைவு!

மாறாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் முதலில் கொரோனா தொற்று தொடர்பான இடர் மதிப்பீடுகள் செய்யப்படும்

அதன் பின்னர், மாநில சுகாதார துறை ஆலோசனையின் பேரில், அப்பள்ளியை முழுமையாக மூடுவதா, இல்லை குறிப்பிட்ட வகுப்புகளை மட்டும் மூடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

90% முதியவர்கள் இன்னும் பதியவில்லை!

சிலாங்கூரில் இன்னும் ஏறக்குறைய 90 விழுக்காட்டு முதியவர்கள், COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்ளவில்லை என, மாநில COVID-19 பணிக்குழு தெரிவித்துள்ளது.

மாநிலம் கடந்து பயணித்ததால் வந்த விளைவு!

இதனை கருத்தில் கொண்டு, வயதானவர்களை அத்தடுப்பூசி திட்டத்திற்கு பதியகிராமப்புற நிர்வாக மன்றங்களின் ஒத்துழைப்பு நாடப்படும் என அப்பணிக்குழு கூறியிருக்கின்றது.

 

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

தனியார் வாகனங்கள் சாலை வரியைப் புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

மாநிலம் கடந்து பயணித்ததால் வந்த விளைவு!இதற்கு முன் மார்ச் 31ஆம் தேதி வரை அந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், வாகனமோட்டிகள் வாகனங்களுக்கு முறையான உரிமம் வைத்திருக்க வேண்டும் என அமைச்சு கூறியது.

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather