Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தற்காலிக ஓரிட சேவை மையங்களை அரசாங்கம் தொடங்கலாம்!

Mar 23, 2021


COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 2ஆம் கட்ட தடுப்பூசிப் பணிகளுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அத்திட்டத்திற்கு இன்னும் பதிந்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் குறிப்பாக முதியவர்கள் விரைந்து பதியுமாறு மலேசிய மருத்துவச் சங்கம் MMA வலியுறுத்தியுள்ளது.

தற்காலிக ஓரிட சேவை மையங்களை அரசாங்கம் தொடங்கலாம்!

வீட்டில் உள்ள பிள்ளைகள் தவிர்த்து, சமூக ஆர்வலர்கள் அல்லது தொகுதி சார் அதிகாரிகள், வயதானவர்களை தடுப்பூசி திட்டத்திற்கு பதிய உதவுமாறு, அச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் Datuk DR S.Subramaniam கேட்டுக் கொண்டுள்ளார்.

கூடுதல் முயற்சியாக, வயதானவர்களை பதிய தற்காலிக ஓரிட சேவை மையங்களை அரசாங்கம் தொடங்கலாம் என்றும் DR Subramaniam பரிந்துரைத்தார்.

மேலும் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் குறிப்பாக வயதானவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

70 வயதை கடந்து விட்ட தாம் அண்மையில், முன்களப் பணியாளர் என்ற முறையில் அத்தடுப்பூசி போட்டுக் கொண்ட அனுபவத்தையும் DR Subramaniam ராகா செய்தியுடன் பகிர்ந்துக் கொண்டார்.

"நான் தடுப்பூசி போட்டு ஏறக்குறைய 3 நாட்களாகி விட்டது; எந்த பிரச்னையும் இல்லை. நான் நலமாக தான் உள்ளேன்; தடுப்பூசி போட்டு கொள்வது முக்கியம்; எனவே தடுப்பூசி போட்டு கொள்ள யாரும் பயப்பட வேண்டாம்" 

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்ளும் வயதானவர்களின்  எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதாக கூறப்படுவது குறித்து அவர் பேசினார்.

சிலாங்கூரில் இன்னும் ஏறக்குறைய 90 விழுக்காட்டு முதியவர்கள், COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்ளவில்லை என, மாநில COVID-19 பணிக்குழு முன்னதாக கூறியிருந்தது.

மற்றொரு நிலவரத்தில், COVID-19 தடுப்பூசிப் போட்டுக் கொண்டப் பின், மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவோருக்கு இழப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை, மலேசிய மருத்துவச் சங்கம் MMA வரவேற்றுள்ளது.

அதன் தொடர்பில் பேசிய MMA தலைவர் பேராசிரியர் Datuk Dr M. Subramaniam…

“சிங்கப்பூரும் இதே போல தான் காப்புறுதி வாயிலாக இத்தகைய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்தது; மலேசியாவும் தற்போது இந்த இழப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்திருப்பது வரவேற்கக்கூடிய ஒன்று தான்; இதனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் இன்றி முன்வருவார்கள்; தடுப்பூசி மீதான அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும்"

அச்சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்கம் ஒரு கோடி ரிங்கிட்டை ஒதுக்கவிருக்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டப் பின், நிரந்தர உடல் செயலிழப்பு அல்லது மரணம் ஏற்பட்டால், 5 லட்சம் ரிங்கிட் உதவி நிதி வழங்கப்படும்;

மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்தது தொடர்பில் DR Subramaniam பேசினார்.

இவ்வேளையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களாக சிலாங்கூர், பேரா மற்று சபா ஆகியவை திகழ்கின்றன.

 

இந்தியாவில் கொரோனா சம்பவங்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன!

ஏப்ரல் 6 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் சூடுப்பிடித்துள்ள நிலையில், COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்காலிக ஓரிட சேவை மையங்களை அரசாங்கம் தொடங்கலாம்!

இதற்கு COVID-19 ஆபத்து பற்றி மக்கள் மத்தியில் இருந்த விழிப்புணர்வு படிப்படியாக குறைந்து வருவது இந்த எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என கூறுகின்றார், சென்னைவாசியான ரோபர்ட். 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இந்தியா முழுக்க 2 லட்சத்து 60 ஆயிரம் புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகின.

அதில் ஏறக்குறைய 70 விழுக்காட்டு சம்பவங்கள் Maharashtraவை உட்படுத்தியுள்ளன.

 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்கா Coloradoவில் உள்ள பேரங்காடி ஒன்றில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில், காவல் துறை அதிகாரி ஒருவர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துப்பாக்கிச் சூட்டை நடத்தி, காயமும் அடைந்த ஆடவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதனை YouTube-பில் நேரலை செய்துள்ளனர்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather