Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கல்வி நிலையங்களை உட்படுத்தி 41 COVID-19 cluster-கள்!

Mar 26, 2021


இவ்வாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை, நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை உட்படுத்தி மொத்தம் 41 COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

அதில் 15 clusterகள் உயர்கல்விக் கூடங்களிலும், 11 clusterகள் இடைநிலைப் பள்ளிகளிலும், 10 cluseterகள் ஆரம்ப மற்றும் பாலர் பள்ளிகளிலும், எஞ்சியவை சமயப் பள்ளிகளிலும் உருவாகியிருப்பதாக  சுகாதார அமைச்சு கூறியது.

கல்வி நிலையங்களை உட்படுத்தி 41 covid-19 cluster-கள்!

புதிதாக அடையாளம் காணப்பட்ட மூன்று clusterகள் அதிலடங்கும்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள், சிற்றுண்டிச் சாலை நடத்துநர்கள், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், மாணவர்கள் என அனைவரும், புதிய வழமைகளை முறையாகப் பின்பற்றுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பான கல்விச் சூழலை ஏற்படுத்தி தர அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அமைச்சு மேற்கோள் காட்டியது.

 

கல்வி அமைச்சு: 2020 SPM தேர்வு சுமூகமாக முடிந்தது!

COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில், கல்வி அமைச்சு 2020 SPM தேர்வை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்துள்ளது!

மிகக் கடுமையாக உழைத்ததன் பயனாக தங்களுக்கு அவ்வெற்றி கிடைத்திருப்பதாக அமைச்சு கூறியிருக்கின்றது.

நாட்டில் முதன் முறையாக Visual Arts தவிர்த்து, SPM தேர்வுத் தாள்கள் அனைத்தும் முழுமையாக இணையம் வழி திருத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி நிலையங்களை உட்படுத்தி 41 covid-19 cluster-கள்!

மற்றொரு நிலவரத்தில், ஏறக்குறைய மூவாயிரம் மாணவர்கள் மறுஅட்டவணையிடப்பட்ட 2020 SPM தேர்வில் அமரவுள்ளனர்.

COVID-19 தொற்றுப் பீடித்தவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்ட மற்றும் உடல் நலக் குறைவுக் காரணமாக மருத்துவரின் அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் அவர்களாவர்.

அவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

தடுப்பூசிக்கு பதியும் கடைசி தேதி வேண்டும்!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்து கொள்ள கடைசி தேதியை நிர்ணயிப்பதன் வாயிலாக, அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியும்!

அதோடு, அடுத்த கட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல் குறித்தும் சிறப்பாக திட்டமிட முடியும் என சுகாதார துணை அமைச்சர் கூறியிருக்கின்றார்.

கல்வி நிலையங்களை உட்படுத்தி 41 covid-19 cluster-கள்!

தடுப்பூசிக்கு பதிந்துக் கொள்வதற்கான கடைசி நாள் என்ற ஒன்று இல்லை என்றால், சிலர் தாமதம் காட்டி, வழக்கம் போல் கடைசி நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்து, அதனால் சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலையை அவர் சுட்டிக் காட்டினார்.

தடுப்பூசிப் போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை தெரிந்தால் தான், அரசாங்கமும் அதற்கேற்ப தடுப்பு மருந்துகளை வாங்க முடியும் என்பதை அவர் குறிப்பிட்டார்.

நடப்பில், 65 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துக் கொண்டுள்ளனர்.

 

 

MyBayarSaman: 10 லட்சம் ரிங்கிட் வசூலிக்கபட்டது!

MyBayarSaman செயலி வாயிலாக, நேற்று பிற்பகல் வரை 10 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தண்டம் வசூலிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் வழி, பொது மக்கள் சாலைக் குற்றங்களுக்கான தண்டங்களை எளிதாக செலுத்த இச்செயலி உதவியிருப்பதை காண முடிவதாக PDRM கூறியது.

அச்செயலியைப் பயன்படுத்தி தண்டம் செலுத்துவோருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைக் குற்றங்களுக்கு 50 விழுக்காட்டு கழிவுச் சலுகை வழங்கப்படுகிறது.

நேற்று அறிவிக்கப்பட்ட அச்சலுகை, ஏப்ரல் 11ஆம் தேதி முடிவடையும்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather