Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது!

Apr 30, 2021


தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது!

நாட்டில் மேலும் 14 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக மூவாயிரத்து 788 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 265 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சரவாக், கிளந்தான், KL, பினாங்கிலும் கூட அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது!

நாடு முழுவதும் இதுவரை 14 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முழுமையாக இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.

Covid-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 38.70 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 

இதுவரை 93 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிந்து கொண்டுள்ளனர். 

தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது!

AstraZeneca COVID-19 தடுப்பூசிக்கான பதிவு முறை குறித்த விரிவான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இறுதிக் கட்டப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அது தெரிவித்தது.

AstraZeneca தடுப்பூசி தன்னார்வ முறையில் முன் வருவோருக்கு மட்டுமே  போடப்படும் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது!

கெடாவில் Kota Setar, Kuala Muda, Bandar Baharu, Baling, Kulim என ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் மே 14 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.

கிளந்தானில் Machang அறிவியல் இடைநிலைப் பள்ளியில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை EMCO மே 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது!

Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறை SOPயை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 420 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் என தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது!

நோன்புப் பெருநாளுக்கான தர செயல்பாட்டு நடைமுறைகள் SOPக்களை இறுதிச் செய்ய வரும் திங்கட்கிழமை தேசிய பாதுகாப்பு மன்றம் சிறப்புக் கூட்டம் நடத்துகிறது. 

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் SOPகள் வெளியிடப்படும் என தற்காப்பு அமைச்சு கூறியது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather