← Back to list
சிவப்பு மண்டலங்களில் MCO கொண்டு வரப்படலாம்!
May 01, 2021
சிவப்பு மண்டலங்களில் MCO கொண்டு வரப்படலாம்!
COVID-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO விதிக்கப்படலாம்!
குறிப்பாக, சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, ஜொகூர், கெடா மற்றும் சரவாக்கில் MCOவை அமுல்படுத்துவதற்கான பரிந்துரை, முக்கிய தரப்புகளிடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு NSTயிடம் தெரிவித்துள்ளது.
அப்பரிந்துரையை மாநில அரசாங்கங்கள், மத்திய அரசாங்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவை ஆழமாக ஆராய்ந்து, அதன் பின்னரே முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.
மேலும் செய்திகள்......
Bukit Aman: வழிக்காட்டி முறையை பின்பற்றுங்கள்!
COVID-19 தடுப்பு SOPகளை மீறுபவர்களுக்கு தண்டம் விதிப்பதற்கு முன்பாக, நிர்ணயிக்கப்பட்ட வழிக்காட்டி முறையை பின்பற்றுமாறு Bukit Aman, அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களையும் வலியுறுத்தியிருக்கின்றது.
SOPகளை மீறும் சிறு தொழில் நடத்துநர்கள், அதாவது சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள், வீட்டின் முன்புறம் அங்காடிக் கடை வைத்துள்ளவர்களை மேற்கோள் காட்டி Bukit Aman பேசியது.
இத்தகைய சிறு தொழில் நடத்துநர்கள் SOP மீறினால், உதாரணத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வியாபாரம் செய்தால், அவர்களுக்கு ஈராயிரம் ரிங்கிட் வரை தண்டம் விதிக்கலாம் என Bukit Aman கூறியது.
Kelantanனில், அங்காடி கடை நடத்துநர் ஒருவர் SOPகளை மீறியதற்காக 50 ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்ட விவாகரம் குறித்து Bukit Aman பேசியது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? காவல் துறை விசாரணை!
தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காக, மாநிலம் கடந்துச் செல்ல தாம் முன்வைத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறி பெண் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை KL காவல் துறை விசாரிக்கின்றது.
அந்த பெண் குறிப்பிடும் தேதியில் எந்த பயண அனுமதி விண்ணப்பங்களும் பெறப்படவில்லை என்பதை காவல் துறை உறுதிப்படுத்தியிருப்பதாக The Star கூறுகின்றது.
பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி!
COVID-19 சீற்றம் காரணமாக தொடர்ந்து 2ஆவது ஆண்டாக, தொழிலாளர் தினம் மிகவும் மிதமான அளவில் கொண்டாடப்படுகின்றது.
இப்பெருந்தொற்றுக்கு மத்தியில் நம்மில் பெரும்பாலானோர் புதிய வழமைகளுடன் பழக்கப்பட்டு விட்டாலும், அத்தொற்று ஏற்படுத்தக்கூடிய அபாயம் இன்னும் தீரவில்லை என்பதால், அனைவரும் SOPகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் இருப்பதை பிரதமர் Tan Sri Muhyiddin Yassin குறிப்பிட்டுள்ளார்.
இப்பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்களில் இருந்து மீண்டும் வர இன்னும் பலர் தினந்தோறும் கடுமையாக உழைத்து வருவதையும் உணர முடிவதாக Tan Sri Muhyiddin கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு தான், வேலை மற்றும் வருமானத்தை தக்க வைத்துக் கொள்வது, தொழிலாளர் உரிமையைப் பாதுகாப்பது மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது போன்ற மூன்று முக்கிய அம்சங்களை அரசாங்கம் கொண்டு வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
இத்தகைய முயற்சிகளுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்திற்கு தோள் கொடுத்து வரும் அனைத்து மலேசியர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
வீட்டில் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் "ஆக்சிஜன்" குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!
COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வரும் இந்தியாவில், "ஆக்சிஜன்" தட்டுப்பாட்டை கையாள அதனை வீட்டில் சுயமாக உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள மக்களை மருத்துவ நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் தேதி நிலவரப்படி, "வீட்டில் எப்படி சுயமாக "ஆக்சிஜன்" உற்பத்தி செய்வது" என்ற தேடல் தான் google மற்றும் YouTube-பில் அதிகம் பதிவாகியிருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மருத்துவ "ஆக்சிஜனை" உற்பத்தி செய்ய அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நடைமுறை உள்ளது; அதனைப் பின்பற்ற தவறினால், வெடிப்புகள் உள்ளிட்ட இதர அபாயங்களை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather