Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 சம்பவங்கள் அதிரடியாக உயர்வு!

May 07, 2021


covid-19 சம்பவங்கள் அதிரடியாக உயர்வு!

நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் கூடுதலாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

புதிதாக நாலாயிரத்து 498 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக ஆயிரத்து 424 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சரவாக், KLலிலும் கூட அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் 22 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.

covid-19 சம்பவங்கள் அதிரடியாக உயர்வு!

தனியார் சிகிச்சை நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து அச்சப்பட வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சில தனியார் சிகிச்சை நிலையங்கள் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் மையங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை என அது விளக்கியது.

தடுப்பூசி செலவை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதால் பொதுமக்கள் அதற்கு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.  

covid-19 சம்பவங்கள் அதிரடியாக உயர்வு!

அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து உதவ ஏறக்குறைய ஆறாயிரம் இளையோர் நாடு முழுவதும் அனுப்பப்படுவர்.

குறிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்டுள்ளவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அவர்கள் செல்வர் என இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்தது.

அவர்கள் பொதுமக்களைப் பதிவு செய்ய உதவுவதோடு தடுப்பூசி போட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்வர் என்றும் அது கூறியது.

covid-19 சம்பவங்கள் அதிரடியாக உயர்வு!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற கையோடு மு.க ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்யலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலர் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களின் சுமையக் குறைக்க சிகிச்சைக்கான மருத்துவமனைக் கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்கும் ஆகியவை அவற்றில் முக்கியமானதாகும்.

முன்னதாக இன்று காலை மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather