Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாநிலம் - மாவட்டம் விட்டு பயணிக்க இன்னும் பலர் முயற்சிக்கின்றனர்!

May 10, 2021


பொது மக்களில் பலர் இன்னமும், மாநிலம் மற்றும் மாவட்டம் விட்டுப் பயணிக்க பலவகையான சாக்குகள் கூறி வருகின்றனர்!

நண்பர்களுக்கு நோன்புப் பெருநாளுக்கான துணி மணிகள் மற்றும் பலகாரங்களை அனுப்பச் செல்வதாக கூறுபவர்களும் அதில் உண்டு என, காவல் துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் - மாவட்டம் விட்டு பயணிக்க இன்னும் பலர் முயற்சிக்கின்றனர்!

அவ்வாறு செய்தவர்கள் வந்த வழியே திருப்பி அனுப்பட்டதாக Petaling Jaya மாவட்ட காவல் துறை தலைவர் கூறியிருக்கின்றார்.

ஆனால் முரண்டுப் பிடிக்கும் வாகனமோட்டிகளுக்கு கரிசனம் இன்றி உடனடியாக தண்டம் விதிக்க காவல் துறை தயங்காது என்றும் அவர் எச்சரித்துள்ளர்.

நேற்று தொடங்கி சாலைத் தடுப்புச் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

 

சுயவிவரங்களை பதிவிடுங்கள்!

ஏதாவது ஓர் இடத்திற்கோ அல்லது வளாகத்திற்கோ நுழையும் போது, சுயவிவரங்களை பதிவிடுவதில் இன்னும் பலர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCOவுக்கான SOPகளில், அதிகமானோர் பின்பற்றத் தவறும் விதிமுறைகளில் ஒன்றாக அது திகழ்கின்றது.

மாநிலம் - மாவட்டம் விட்டு பயணிக்க இன்னும் பலர் முயற்சிக்கின்றனர்!

ஓராண்டுக்கும் மேலாக, நாடு COVID-19 பெருந்தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட SOPகளை சிலர் இன்னமும் அலட்சியப்படுத்தி வருவது வருத்தமளிப்பதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

சுயவிவரங்களை பதிவிட தவறுவதால், COVID-19 தொற்றுக் கண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் கடினமாவதாக அமைச்சர் சொன்னார்.

 

மருத்துவமனை அல்லது கிளினிக் அட்டையை காட்டினால் போதும்!

மருத்துவரை காண முன்பதிவு செய்தவர்கள் அல்லது அட்டவணையிடப்பட்ட சிகிச்சைக்கு செல்பவர்கள், காவல் துறையின் அனுமதி கடிதத்தை பெற வேண்டியதில்லை.

மாறாக, காவல் துறை சாலை தடுப்புச் சோதனையின் போது, அவர்கள் தங்களது மருத்துவமனை அல்லது கிளினிக் அட்டைகளை காட்டினால் போதுமானது என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறியுள்ளார்.

மாநிலம் - மாவட்டம் விட்டு பயணிக்க இன்னும் பலர் முயற்சிக்கின்றனர்!

மருத்துவ தேவைக்குக்கூட காவல் துறையின் அனுமதி கடிதம் பெறுவது தொடர்பில்  பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் குறித்து அமைச்சர் பேசினார்.

குறிப்பாக, புற்றுநோய் அல்லது சிறுநீரகக் கோளாறு பிரச்னை கொண்டவர்கள், அட்டவணையிடப்பட்ட சிகிச்சைக்கு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதை அவர் சுட்டிக் காட்டினார்.

வேலைக்குச் செல்பவர்கள்.......

மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்து, வேலைக்குச் செல்பவர்கள் காவல் துறையின் அனுமதி கடிதம் பெறத் தேவையில்லை.

அவர்கள், அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு மற்றும் தங்களது முதலாளில் அல்லது வேலையிடத்தில் இருந்து பெறப்பட்ட அனுமதிக் கடிதம் வைத்திருந்தாலே போதும் என, சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் FMTயிடம் கூறியுள்ளார்.

 

காணொளியுடன் சேர்த்து பகிரப்பட்டு வரும் தகவல்; காவல் துறை மறுப்பு!

சிலாங்கூரில் உள்ள இரு பெரும் பேரங்காடிகளில், மக்கள் SOPகளை பின்பற்றாமல் நடமாடியதாக கூறி கூறி காணொளியுடன் சேர்த்து பகிரப்பட்டு வரும் தகவலை மாநில காவல் துறை மறுத்துள்ளது.

மாநிலம் - மாவட்டம் விட்டு பயணிக்க இன்னும் பலர் முயற்சிக்கின்றனர்!

19 வினாடிகள் கொண்ட அக்காணொளி காட்சியை ஆராய்ந்ததில், அதில் பதிவாகியுள்ள பேரங்காடிகளையும், நேரில் உள்ள பேரங்காடிகளையும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதாக அத்துறை கூறியது.

அவ்விரு பேரங்காடிகளிலும் மக்கள் SOPகளை மீறவில்லை என்பதும் கண்காணிப்பில் உறுதியாகியிருப்பதாக, அத்துறை தெரிவித்தது.

எனவே, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை இஷ்டத்திற்கு பகிர்ந்து, மக்களை குழப்ப வேண்டாம் என அத்துறை அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டது.

 

விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

COVID-19 தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், தேசிய தடுப்பூசி திட்டத்தை பாதிக்காமல் இருப்பதை உறுதிச் செய்ய, அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

அவற்றில் ஒரு வழி, அதிகமான தடுப்பூசி விகிதத்தை கொண்டுள்ள நாடுகளுடன் மலேசியா கலந்துப் பேசுவது தான் என, மலேசிய மருத்துவ சங்கம் கூறுகின்றது.

மாநிலம் - மாவட்டம் விட்டு பயணிக்க இன்னும் பலர் முயற்சிக்கின்றனர்!

இதன் வழி, மலேசியர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையாவது விரைந்து பெற்றுக் கொள்ள முடியும் என MMA தலைவர் பேராசிரியர் Datuk Dr M.Subramaniam கூறியுள்ளார்.

மற்றொரு வழி, 2ஆம் டோஸ் தடுப்பூசியை தாமதப்படுத்துவது; இதன் வழி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் முதல் டோஸைப் போட்டுக் கொள்ள முடியும் என்றாரவர்.

Pfizer போன்ற தடுப்பூசிகள் வாயிலாக இந்த வழிகளை மேற்கொள்ளலாம்

காரணம், அதன் முதல் டோஸ் தடுப்பூசி 65 விழுக்காடு வரை கொரோனா தொற்றில் பாதுகாக்கக் கூடிய ஆற்றல் கொண்டது என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருப்பதை Dr Subramaniam சுட்டிக் காட்டினார்.

 

ஒரே ஒரு கொரோனா தொற்று மட்டுமே பதிவானது!

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை, சிங்கப்பூருக்கு இரு வழி பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்களை உட்படுத்தி, ஒரே ஒரு COVID-19 தொற்று மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் - மாவட்டம் விட்டு பயணிக்க இன்னும் பலர் முயற்சிக்கின்றனர்!

அதற்கு SOPகளை கடுமையாக கையாளும் ஜொகூர் குடிநுழைவுத் துறை தான் காரணம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather