← Back to list
தடுப்பூசி போட்டவர்களுக்கு பயணக் கடப்பிதழ் அறிமுகப்படுத்தப்படலாம்!
Jun 21, 2021
COVID-19 தடுப்பூசி போட்டு முடித்த மலேசியர்கள், மாவட்டம், மாநிலம் மற்றும் நாடு கடந்து பயணங்கள் மேற்கொள்ள ஏதுவாக, அவர்களுக்கு COVID-19 தடுப்பூசி கடப்பிதழ்கள் அறிமுகப்படுத்தப்படலாம்!
சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்துள்ளார்.
எனினும், அக்கடப்பிதழ் முறையை இப்போதைக்கு அறிமுகப்படுத்த முடியாது.
காரணம், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இன்னும் 10 விழுக்காட்டினர் கூட கொரோனா தடுப்பூசிக்கான இரு டோஸ்களையும் முழுமையாக போட்டு முடிக்கவில்லை என்றாவர்.
இந்நிலையில், தினசரிப் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் நாடு சீக்கிரமே கொரோனா தொற்றுக்கு எதிரான கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்து விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று மூன்றாம் கட்டம் தடுப்பூசி திட்டம்!
கிள்ளான் பள்ளத்தாக்கில், இன்று, COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூன்றாம் கட்டம், Bukit Jalil தேசிய விளையாட்டரங்கில் தொடங்குகின்றது.
இதையடுத்து, பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பதிந்துக் கொண்டவர்கள், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைக்கப்படுவார்கள் என தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
எண்ணிக்கை திருப்தியளிக்கிறது! - NUTP
90 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் குறைந்தது, ஒரு டோஸ் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருப்பது திருப்தியளிப்பதாக, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP கூறுகின்றது.
எனினும், மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் முன்பாக, தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என NUTP தலைவர் Aminuddin Awang வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள், COVID-19 தொற்றுக்கு ஆளாகக் கூடிய ஆபத்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை!
நாடு முழுவதும் இதுவரை ஏறக்குறைய 58 லட்சம் பேருக்கு COVID-19 தடுப்பூசி முதல் மற்றும் 2ஆம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
அவர்களில் இதுவரை 16 லட்சம் பேர் முழு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
14 நாட்கள் அவகாசம்! - UMNO
நாடாளுமன்றம் இன்னும் 14 நாட்களில் தொடங்க வேண்டும் என UMNO வலியுறுத்தியுள்ளது.
Istana Negara அண்மையில் வெளியிட்ட அறிக்கையை பின்பற்றி, அந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக UMNO கூறியிருக்கின்றது.
ஒருவேளை அதனை பின்பற்றத் தவறினால் அது, மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்படுவதற்கு அர்த்தமாகும் என்றும் UMNO கூறியுள்ளது.
இந்நிலையில், நாளுமன்றக் கூட்டத் தொடரை வேண்டுமென்றே தள்ளிப் போடும் எண்ணம் இல்லை என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறியுள்ளார்,
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள COVID-19 பெருந்தொற்றை கையாள்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.
நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்குள், முக்கிய கூறுகள் குறித்து ஆராய ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர், நாடாளுமன்றம் கூடும் முடிவை அச்செயற்குழு தீர்மானிக்கும் என்றார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather