Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே!

Jun 25, 2021


கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே!

மலேசியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து Covid-19 தடுப்பூசிகளும் கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே.

Pfizer, AstraZeneca, Sinovac ஆகிய மூன்று தடுப்பூசிகளும் அவர்களுக்கு பொருத்தமானதாகவே இருப்பதாக தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

பொருத்தமான தடுப்பூசி குறித்த ஆகக் கடைசி விவரங்கள் அவ்வப்போது தெரியப்படுத்தப்படும் என்றும் அது கூறியது.   

கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே!Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்னரோ பின்னரோ டுரியான் சாப்பிடுவதால் ஆபத்தில்லை. 

அண்மையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் டுரியான் உண்ட ஆடவர் ஒருவர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது தொடர்பில் சுகாதார அமைச்சு அவ்வாறு கூறியது. 

அச்செய்தி உண்மையில்லை; அந்நபர் உண்மையில் மாரடைப்பால் மரணமடைந்ததாக அது தெளிவுபடுத்தியது.

கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே!

நாடு முழுவதும் இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே நாடு முழுவதும் 17 லட்சத்துக்கும் அதிகமான வயதானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முழுமையாக இரு டோஸ்களையும் பெற்றுள்ளதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு கூறியது.

கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே!

ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டுமானத் துறையினருக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கும் என தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளார் Khairy Jamaludin தெரிவித்துள்ளார். 

கட்டுமானத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் உடனடியாகத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் பொது பணி அமைச்சால் ஒருங்கிணைக்கப்படும் என அவர் கூறினார்.

இதனிடையே தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சுடனும் தமது தரப்பு பேச்சு வார்த்தையைத் தொடக்கியிருப்பதாகத் தெரிவித்த Khairy, அத்தொழிற்துறையினருக்கும் தடுப்பூசி போடப்படவிருப்பதாகச் சொன்னார்.

கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே!

மலேசியா ஒரு மில்லியன் AstraZeneca தடுப்பூசி டோஸ்களை ஜப்பானிடம் இருந்து பெறவிருக்கிறது. 

அடுத்த மாதத்தில் அத்தடுப்பூசி டோஸ்கள் கொடுக்கப்படும் என ஜப்பான் இதற்கு முன் கூறியிருந்தது.

கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானதே!

நாட்டில் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது.

ஆகக் கடைசியாக 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக ஐயாயிரத்து 812 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather