Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Op Patuh தொடங்கியது!

Jul 02, 2021


COVID-19 சீற்றத்திற்கு மத்தியில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள், நிர்ணயிக்கப்பட்ட SOPயை முறையாக பின்பற்றுகின்றனவா என்பதை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கும்!

அதற்காக, நாடு முழுவதும் இன்று பேரளவிலான Op Patuh நடவடிக்கை தொடங்குகிறது.

op patuh தொடங்கியது!

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற, அதிக அளவில் COVID-19 சம்பவங்களைப் பதிவுச் செய்து வரும் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என உள்துறை அமைச்சு கூறியது.

தொழிற்பேட்டைகள் குறிப்பாக, கொரோனா பரவும் ஆபத்து அதிகம் உள்ள தொழிலாளர் தங்குமிடங்களை அந்நடவடிக்கை உட்படுத்தியிருக்கும் என அமைச்சு தெரிவித்தது.

 

Ismail Sabri: நாளை தொடங்கி EMCO!

சிலாங்கூர், KL என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில், நாளை தொடங்கி 14 நாட்களுக்கு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.

op patuh தொடங்கியது!

அந்த EMCO, ஜூலை 16 ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த EMCO அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில், நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 800 முதல் ஆயிரத்து 900 கொரோனா சம்பவங்கள் பதிவாகி வருவதாக அமைச்சர் சொன்னார்.

EMCO அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, காவல் துறை கண்காணிப்பு போடப்படும் என்றாரவர்.

அவசியமோ அவசரமோ இல்லாத பட்சத்தில் மக்கள் தத்தம் வீடுகளை விட்டு வெளியேற அனுமதியில்லை.

op patuh தொடங்கியது!

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க, வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்டு மட்டுமே பயணிக்க முடியும்;

அதுவும் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என அவர் சொன்னார்.

எனினும், COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, மாநிலம் அல்லது மாவட்டம் விட்டு கடக்க வேண்டியியிருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

அவர்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

ஆபத்து அவசரக் காரணங்களுக்காக அல்லது காவல் துறை அனுமதியில்லாமல் மக்கள் இரவு 8 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை.

உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்;

உணவுகளை பொட்டலமிட்டு அனுப்புதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்யும் நடவடிக்கைகளும், அந்த நேரத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

விளையாட்டு, சமூக ஒன்றுக் கூடல், பொழுதுப் போக்கு மற்றும் கலாச்சாரம் சார்ந்த எந்த நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி கிடையாது.

அரிசி, ரொட்டி, சீனி, சமையல் எண்ணெய், பால், குழந்தைகளுக்கான பால் மாவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

op patuh தொடங்கியது!

இவ்வேளையில், நேற்று ஒரு நாளில் நாட்டில் ஆறாயிரத்து 988 கொரோனா  சம்பவங்கள் பதிவாகின.

அதில் ஈராயிரத்து 800க்கும் அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

நாட்டில் தினசரி கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆறாயிரத்தை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather