Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

39.5% பெரியவர்கள் தடுப்பூசி போட்டு முடித்தனர்!

Aug 11, 2021


 

39.5% பெரியவர்கள் தடுப்பூசி போட்டு முடித்தனர்!

நாட்டில் கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டு முடித்த பெரியவர்களின் எண்ணிக்கை 40 விழுக்காட்டை நெருங்கியுள்ளது.

இதுவரையிலான நிலவரப்படி 39.5 விழுக்காட்டினர், அதாவது 92 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமான பெரியவர்கள் இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.

இதையடுத்து 28.3 விழுக்காட்டு மலேசியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று மூன்று லட்சத்து 57 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டன.

----- 

18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி போட சரவாக் மாநில அரசு பரிசிலிக்கின்றது.

அம்மாநிலத்தில் நேற்று பதிவான 800க்கும் அதிகமான கொரோனா சம்பவங்களில் 260, 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களை உட்படுத்தியிருக்கின்றது;

இந்நிலையில் அந்த வயதுடையவர்களுக்குத், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட அரசாங்கம் முடிவெடுக்கும் வரை காத்திருப்பது சரியாக இருக்காது என, மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு ஆலோசகர் கூறியிருக்கின்றார்.

---- 

தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டங்களில் இருக்கும் மாநிலங்ளில் கோவிட் 19 தடுப்பூசி போட்டு முடித்தவர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ள போதிலும், பினாங்கிலுள்ள சில, உணவக உரிமையாளர்கள் மத்தியில் அத்தளர்வுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒரு சில உணவகங்கள் வாடிக்கையாளர்களை Dine-in சேவைக்கு அனுமதிக்க தயங்குகின்றன.

இன்னும் சில உணவகங்களில் ஊழியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போடாததால், முதலாளிமார்கள் துணிந்து பொது மக்களை உணவகங்களுக்குள் அனுமதிப்பதில்லை என்பது Bernama ஆய்வில் தெரிய வந்துள்ளது.

----- 

கடந்த மாத நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடர்பில் முதல் கோவிட் 19 உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அக்கூட்டத்திற்கு வந்தவர்களில் மேலும் 97 பேருக்கு இதுவரை அத்தொற்று பீடித்துள்ள நிலையில், செப்டம்பர் மாத நாடாளுமன்ற கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படவிருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

---- 

கெடாவில் MySejahtera-வில் வெளியிடப்படுவது போல போலி இலக்கவியல் சான்றிதழ் விற்கப்படுவதாக புகார் கிடைத்திருப்பதை அடுத்து, மாநில காவல் துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather