Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தளர்வை சந்தர்ப்பமாக்கிக் கொள்ள வேண்டாம்!

Sep 16, 2021


 

தளர்வை சந்தர்ப்பமாக்கிக் கொள்ள வேண்டாம்!

கோவிட் 19 தொற்றுக்கான கட்டுப்பாடுகளுக்கு அரசாங்கம் கொடுத்த தளர்வானது, SOP நடைமுறைகளை மெத்தனமாக எடுத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் என அர்த்தமாகாது!

கொரோனா தொற்றிலிருந்து நம்மையும் நாட்டையும் சமுதாயத்தையும் விடுபடச் செய்ய தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருமாறு பேராக் MB Datuk Saarani Mohamad பொது மக்களை வலியுறுத்துகின்றார்.

தடுப்பூசி போடாதவர்கள் MySejahtera-வில் பதிந்து கொள்ளவோ அல்லது Walk in முறையில் PPVக்குச் சென்றுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ளவோ தயங்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார்.

----- 

வரும் நவம்பருக்குள் நாட்டிலுள்ள 60 விழுக்காட்டு இளையோருக்குக் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட இலக்கு வைக்கப்பட்டுள்ளது!

2022ஆம் ஆண்டு பள்ளித் தவணை தொடங்குவதற்குள் 80 விழுக்காட்டு 12லிருந்து 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, இளையோருக்கான கோவிட் 19  நோய்த்தடுப்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

---- 

தேசிய மீட்சித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்ள மாநிலங்களில், நாளை முதல் பாலர் பள்ளிகள், சிறார் பராமரிப்பு மையங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

அக்கட்டங்களிலுள்ள வேலை செய்யும் பெற்றோர்களுக்கு உதவும் விதமாக அந்த சிறுவர் பராமரிப்புச் சேவைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

----- 

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடந்து பயணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியை நம்ப வேண்டாம்!

வரும் சனிக்கிழமை முதல் இத்தளர்வு அமுலுக்கு வருவதாகக் கூறி வெளியாகியுள்ள விளக்கப்படம் பொய்யானது என MKN தெரிவித்திருக்கின்றது.

----- 

நாட்டில் 76.2 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டு முடத்துள்ளனர்.

நேற்று 2 லட்சத்து 48 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டன.

----- 

தாய்லாந்து தலைநகர் Bangkok அடுத்த மாதம் 15ஆம் தேதி அனைத்துலக பயணிகளுக்காகத் திறந்துவிடப்படவுள்ளது.

அதற்குள் அந்நகரத்தைச் சேர்ந்த குறைந்தது 70 விழுக்காட்டு மக்களுக்குத் தடுப்பூசி போட்டு முடிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather