Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: மிக உயரிய எண்ணிக்கை இன்று!

Dec 31, 2020


2020ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று நாட்டில் இதுவரை இல்லாத மிக உயரிய Covid-19 தினசரி சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன!

இன்று மட்டும் ஈராயிரத்து 525 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, அதில் 1200 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவானவை.

ஆயிரத்து 400 பேர் அத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

எண்மர் அத்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

_______

அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி உயர்கல்வி கழக மாணவர்கள் கட்டங்கட்டமாக உயர்கல்வி கழக வளாகங்களுக்குத் திரும்ப தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளது!

சிவப்பு மண்டலப் பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் பத்து நாட்களுக்கு முன்பாகவே வந்து Covid-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த உயர்கல்வி கழகங்கள் செயல்படுவது குறித்த முடிவு அந்தந்த மாநில அரசைப் பொருத்தது.

அதோடு நாட்டிலுள்ள எல்லா தனியார் மற்றும் பொது உயர்கல்வி கழகங்களிலும் ஜனவரி 1 முதல் அனைத்துலக மாணவர்கள் சேறவும் அனுமதி வழங்கப்படுகின்றது.

அனைத்துலக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருவதற்கு முன்பு 10 நாட்கள் கட்டாய தனிமைபடுத்துதலை மேற்கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

________

பினாங்கு, Seberang Jayaவில் கர்பிணி பூனையை அடித்துக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 51 வயது மாது, விசாரணைக்காக நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மாநில கால்நடை சேவை துறையின் கோரிக்கையின் பேரில் அவரைத் தடுத்து வைக்க Bukit Mertajam Majistret நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

______

ஜொகூர், பஹாங், திரங்காணு, கிளாந்தான் ஆகிய மாநிலங்களில்சி வப்பு நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மோசமான வானிலை நீடிக்கலாம் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

______

இன்று மாலை 5 மணி தொடங்கி லங்காவியில் கடற்கரை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் வியாபாரங்களுக்கும் அனுமதி இல்லை!

புத்தாண்டை முன்னிட்டு எந்த வரவேற்புக் கொண்டாட்டங்களும் ஒன்று கூடல் நிகழ்வுகளும் நடத்தப்படாமல் இருப்பதை உறுதிச் செய்யவே அத்தடை விதிக்கப்படுவதாக லங்காவி காவல் துறை தெரிவித்தது.

______

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் Tan Sri Muhyiddin Yassin இன்றிரவு சிறப்பு உறையாற்றவிருக்கின்றார்.

அதன் நேரடி ஒளிபரப்பை இரவு 9 மணிக்கு Astro AWANI அலைவரிசை 501றில் காணத் தவறாதீர்கள்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather