Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

Jan 03, 2021


Covid-19 தடுப்பூசி பெறப்பட்டதும் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு அத்தடுப்பூசி போடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

முன் வரிசைப் பணியாளர்களுக்கும் நாட்பட்ட உபாதைகளால் அவதியுற்று வருவோருக்கும் முன்னுரிமை வழங்கி முதலில் அத்தடுப்பூசி போடப்படுகிறது.

ஏப்ரல் மற்றும் மேல் மாதத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம் தொடரும் என சுகாதார அமைச்சு கூறியது.

மலேசியர்களில் 80 விழுக்காட்டுனருக்கு Covid-19 தடுப்பூசியை இலவசமாகப் போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Covid-19 தொடர்பில் பதிவாகும் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருப்பதை அடுத்து அது அவ்வாறு கூறியது.

சம்பவங்களின் எண்ணிக்கை உயரலாம் என்பதால், அந்நிலையைச் சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

தேவைப்பட்டால், சிலாங்கூர், Serdangங்கில் உள்ள தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் மேலும் அதிகமான கட்டில்கள் போடப்படலாம்.  

Covid-19 தொடர்பில் புதிதாக 9 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்கானு, ஜொகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் அவை கண்டறியப்படுளள்ளன.

அந்த clusterகளில் ஈராயிரத்து 880க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் கிட்டதட்ட 420 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து கல்விக் கழகங்களும் இவ்வாண்டுக்கான பள்ளித் தவணையைப் பின்பற்றி மீண்டும் திறக்கப்படும். 

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் உட்பட நாடு முழுவதும் அனைத்து இடங்களையும் அது உட்படுத்தியிருக்கிறது.  

பஹாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் சில பகுதிகளில் கனத்த மழையுடன் கூடிய மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. 

அந்நிலை நாளை வரை நீடிக்கலாம். 

ஜொகூரில் கிட்டதட்ட ஐயாயிரம் பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அங்கு ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பஹாங்கில் 44 பேர் நிவாரண மையத்தில் உள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather