Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

18 வகையான சில்லறை வர்த்தகங்களுக்கு அனுமதி!

Feb 10, 2021


இன்று முதல், வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம்!

எனினும், ஒரு மேசைக்கு 2 பேர் என்ற பேர் அடிப்படையில், ஒரு மீட்டர் தனிமனித இடைவெளியை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறியுள்ளார்.

எஞ்சியுள்ள 18 வகையான சில்லறை வர்த்தகங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.

அக்கடைகள் திறக்கப்பட்டதும், ஒரு நாளுக்கு மூன்று முறை கட்டாயம் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

கடை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் எல்லா நேரமும் சுவாசக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

37 புள்ளி 5 பாகை செல்சியஸ் உடல் வெப்ப நிலைக் கொண்ட வாடிக்கையாளர்கள், அக்கடைகளுக்கும் நுழைய அனுமதிக்கபடக்கூடாது.

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, இயன்ற வரை மின்னியல் முறை வியாபாரத்தை மேற்கொள்ள கடை நடத்துநர்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அமைச்சர் சொன்னார்.

அனுமதிக்கப்பட்ட வியாபாரங்கள் குறித்த முழுப் பட்டியலை தேசியப் பாதுகாப்பு மன்றம் MKN அகப்பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இணைய வசதி உள்ள இடங்களில் MySejahtera கட்டாயம்!

இணைய வசதி சேவை வலுவாக உள்ள பகுதிகளில் MySejahtera செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் COVID-19 சம்பவங்கள் பதிவானால், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, இம்முறை உதவும் என Datuk Seri Ismail Sabri தெரிவித்துள்ளார்.

எனினும், இணைய வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் இதர உட்புறப் பகுதிகளுக்கு இந்த கட்டாய விதிமுறையில் விலக்கு அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

தினசரி சம்பங்களின் எண்ணிக்கை குறைந்தது!

ஏறக்குறைய 26 நாட்களுக்கு பிறகு நாட்டில் நேற்று முதன் முறையாக COVID-19 சம்பவங்கள் மூவாயிரத்திற்கும் குறைவாக பதிவாகின.

நேற்று ஈராயிரத்து 764 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட வேளை, 13 மரணங்கள் நிகழ்ந்து, மொத்த மரண எண்ணிக்கை தொள்ளாயிரத்தை கடந்துள்ளது.

சர்ச்சைக்கு கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! 

வெளிநாடுகளில் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் அமைச்சர்கள் தங்களை 3 நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நடைமுறை குறித்து சர்ச்சைக் கருத்து வெளியிட்ட, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Mohd Puad Zarkashi, பொது மன்னிப்பு கேட்க வேண்டும்!

இல்லையென்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.

இந்தோனிசியாவுக்கான அதிகாரத்துவப் பயணத்தை முடித்து திரும்பிய பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, தன்னை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து தவிர்க்கவே, 3 நாட்களுக்கான அப்புதிய நடைமுறை திட்டமிட்டு அறிவிக்கப்பட்டதாக Puad Zarkashi குற்றம் சாட்டியிருந்தார்.

அதனை திட்டவட்டமாக மறுத்த PMO, உண்மையில் பிரதமருக்கு வீட்டில் தன்னை  தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டு, அதற்கு அடையாளமாக அவரது கையில் கண்காணிப்பு வளையமும் பொருத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather