Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 தடுப்பூசி இம்மாத இறுதியில்!

Feb 01, 2021


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக நாலாயிரத்து 214 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சிலாங்கூரிலும் ஜொகூரிலும் தலா ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பத்து பேர் அக்கிருமித் தொற்றால் மரணமடைந்திருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 770 ஆக அதிகரித்துள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizerரிடம் இருந்து அரசாங்கம் வாங்கிய முதல் கட்ட Covid-19 தடுப்பூசி இம்மாதம் 26 ஆம் தேதி மலேசியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு வந்தடைந்ததும் அவை ஒரு வாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறியது.

Covid-19 மருத்துவ பரிசோதனை முடிவுகளைத் தெரியப்படுத்துவதைத் தாமதிப்பதாக தனியார் மருத்துவர்கள் அடையாளம் காணப்படவில்லை.

அதன் தொடர்பில் புகாரும் கிடைக்கப் பெறவில்லை என மலேசிய தனியார் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. 

வழக்கமாக பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும், அவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என அது விளக்கியது.

நாட்டில் Covid-19 சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், இனி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் அனுசரணை போக்கு காட்டப்படாது.

பிப்ரவரி நான்காம் தேதிக்குப் பிறகு SOPக்களை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் எச்சரித்தார். 

மலாக்காவில் Sungai Udang சிறைச்சாலை மற்றும் அதன் ஊழியர்கள் kuartersசில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இம்மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதி வரை அங்கு EMCO அமலில் இருக்கும்.

சீனப் புத்தாண்டையொட்டிய தர செயல்பாட்டு நடைமுறைகள் அப்பெருநாளுக்கு ஒரு வாரம் இருக்கும் போது அறிவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மியன்மார் தலைவர் Aung San Suu Kyiயைக் கைது செய்துள்ள அந்நாட்டு ராணுவம் ஓராண்டு கால அவசர நிலையை அறிவித்துள்ளது.

அதோடு ராணுவப் படைத் தளபதி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு பொதுத் தேர்தல் வாக்களிப்பில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறி ராணுவம் Suu Kyiயைக் கைது செய்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather