Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: ஐயாயிரத்தைத் தாண்டியது!

Jan 29, 2021


Covid-19 தொடர்பில் ஒரே நாளில் மிக உயரிய எண்ணிக்கையாக புதிதாக ஐயாயிரத்து 725 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

புதிய சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியிருப்பது இதுவே முதல் முறை.

சிலாங்கூரில் மிக அதிகமாக மூவாயிரத்து 126 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அடுத்து KLலில் மிக அதிகமாக 687 சம்பவங்களும் ஜொகூரில் 684 சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் 16 பேர் அக்கிருமித் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துறையில் முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்த அரசாங்கத்திற்கு எண்ணம் இல்லை. 

Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகப் பதிவானாலும், அந்நடவடிக்கை அமல்படுத்தப்படாது என நிதியமைச்சு தெரிவித்தது. 

மாறாக, தர செயல்பாட்டு நடைமுறைகளைக் கடுமையாக்கி அது பின்பற்றப்படுவதை உறுதிச் செய்யும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். 

மற்றொரு நிலவரத்தில், நாடளாவிய நிலையிலான Covid-19 தடுப்பூசித் திட்டம் நாட்டின் பொருளாதார மீட்சியை ஊக்குவிக்க உதவும் என அமைச்சு மேலும் கூறியது.

பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை தங்களது லைசன்சை புதுப்பிக்க தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அத்தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

அதே சமயம் லைசன்சைப் புதுப்பிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ள காலம் முடிவடைந்ததும், அத்தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் காலாவதியான தங்களது லைசன்சைப் புதுப்பித்து விட வேண்டும்.   

நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் இரவுச் சந்தைகள் மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகக் கடைசியாக சரி பார்த்துள்ள தர செயல்பாட்டு நடைமுறையில் அத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக NST செய்தி கூறுகிறது. 

அடுத்த ஒரு வாரத்திற்கு RON95, RON97 பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

டீசல் விலை 2 சென் சரிந்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather