Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உணவகங்களுக்குப் பச்சை கொடி!

Feb 09, 2021


இனி உணவகங்களிலும் உணவுக் கடைகளிலும் வாடிக்கையளார்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

எனினும் ஒரு மேஜையில் இருவர் அமர வேண்டும், இருவருக்குமிடையே ஒரு மீட்டர் தூர இடைவெளி இருக்க வேண்டும் ஆகிய SOPக்களைக் கருத்தில் கொள்ளுமாறு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaaob நினைவுறுத்தினார்.

மேலும் ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரத் துறைகளும் MCO சமயத்தில் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் சொன்னார்.

மேல் விவரங்களுக்கு www.mkn.gov.my

______

Covid-19 தொடர்பில் நாட்டில் பதிவாகும் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

இன்று புதிதாக ஈராயிரத்து 764 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது MCO தொடங்கியதிலிருந்து பதிவான மிக குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.

இதனிடையே புதிதாக 13 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

______

இணைய கற்றல் கற்பித்தலுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய கையேட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்!

தேசிய ஆசியர்கள் பணியாளர் சங்கம் NUTP அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அப்புதிய மேம்படுத்தப்பட்ட கையேட்டுக்கு 14 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதகத் தெரிவித்த அச்சங்கம், இதற்கு முன் இருந்த கையேடே ஏற்புடையதாக இருந்ததாகக் கூறியது.

______

பேராக்கிலுள்ள பிரதான பள்ளி வாசல்களில் 250 பேருடன் வெள்ளிக்கிழமை தொழுகை மேற்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மற்ற பள்ளிவாசல்களிலும், சூராவ்களிலும் அதிக பட்சமாக 120 பேருடன் தொழிகை மேற்கொள்ளலாம்.

______

அதிகமான சிறார்கள் தற்போது ஆபத்தை விளைவிக்கக் கூடிய அல்லது, அவர்களது மனநலத்தைப் பாதிக்கக் கூடிய இணைய உள்ளடக்கங்களை தினசரி பார்க்கின்றனர்.

இதனால் அவர்கள் எந்த வித பாதிப்பையும் எதிர்நோக்கிவிடாமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சமூக வலைத்தள கணக்குகளை தனியார் கணக்காக மாற்றும்படி  மென்பொருள் நிறுவனமான ACRONIS கேட்டுக் கொண்டுள்ளது.

பிள்ளைகள் அளவுக்கு மீறி தகவல்களைப் பகிராமல் இருக்கும்படி அவர்களுக்கு அவ்வப்போது நினைவுறுததுமாறும் அது சொன்னது.

இன்று அனுசரிக்கப்படும் உலக இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ACRONIS நிறுவனம், அவ்வாலோசனைகளை வழங்கியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather