Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி!

Feb 14, 2021


Covid-19 தடுப்பூசித் திட்டம் தொடங்கியதும், நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு அத்தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 600 இடங்களில் அத்தடுப்பூசிப் போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு கூறியது.

முதல் கட்ட தடுப்பூசித் திட்டம் இம்மாத இறுதி வாக்கில் தொடங்குகிறது.

அதில் மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட முன் வரிசையில் பணியாற்றுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள காலக் கட்டம் வரை முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் மீண்டும் திறக்கப்பட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஆயினும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இட கொள்ளளவைப் பொருத்து ஒரு நேரத்தில் 30 பேர் வரை வழிப்பாட்டுத் தளங்களில் இருக்கலாம்.

இந்து ஆலயங்கள் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் பின்னர் மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் Covid-19 தொடர்பில் பதிவாகியுள்ள clusterகளில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை வேலையிடங்களை உட்படுத்தியவை. 

கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து 852 clusterகள் கண்டறியப்பட்டுள்ளன. 

அவற்றில் 527 வேலையிடங்களில் அடையாளம் காணப்பட்டவை என சுகாதார அமைச்சு கூறியது.

Ampangங்கில் சீனப் புத்தாண்டைக் கொண்டாட ஒன்றாகக் கூடியது தொடர்பில் காவல் துறை 20 பேரைத் தேடி வருகிறது.

அவர்கள் தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறிய காணொளி சீன இணைய அகப்பக்கத்தில் வெளியாகியிருப்பதாக காவல் துறை கூறியது.

சீனப் புத்தாண்டின் முதல் நாளில் 200க்கும் மேற்பட்டோர் மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க முயன்றது தெரிய வந்திருக்கிறது. 

SOPக்களை மீறியதற்காக வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சுமார் 760 பேரில் அவர்களும் அடங்குவர்.

KL, Jalan Dutaவில் காவல் வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாது ஒருவர் கொடுத்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படுவதாக காவல் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

இவ்வேளையில் அச்சம்பவம் தொடர்பில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக ஆகக் கடைசித் தகவல் கூறுகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather