Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

BPR: விண்ணப்பம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

Feb 15, 2021


BPR பரிவுமிக்க உதவி நிதிக்கான புதிய விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களை சரிப்பார்த்து, மேம்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

MCO 2.0வினால் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அக்காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சு கூறியது.

2020 வாழ்க்கைச் செலவின உதவித் தொகை BSH அல்லது தேசிய பரிவுமிக்க உதவித் தொகை BPN பெறாத B40 மக்கள், ஐயாயிரம் ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவாக குடும்ப வருமானம் ஈட்டுபவர்கள், BPRருக்கான புதிய விண்ணப்பங்களை அனுப்பலாம் என அமைச்சு தெரிவித்தது.

COVID-19 சீற்றத்தினால் வேலையில் மாற்றம் ஏற்பட்டு, புதிதாக வருமானம் பாதிக்கப்பட்டோரும் இந்த உதவி நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

BPRருக்கான முதல் கட்ட உதவி இம்மாத இறுதியில் வழங்கப்படும்;  2ஆம் கட்ட தொகை மே மாத தொடக்கதில் விநியோகிக்கப்படும் என அமைச்சு கூறியது.

மேற்கொண்டு தகவல்களை பொது மக்கள் BPRருக்கான அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

COVID-19: தடுப்பூசியை தேர்ந்தெடுக்க முடியாது! 

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் போடப்படும் தடுப்பூசிகள் அனைத்தும், தேசிய மருந்தக ஒழுங்குப் பிரிவின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்கும் என, அத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

எனவே, எந்த முத்திரையிலான COVID-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது என்பதை பொது மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது என்றாரவர்.

தேசிய தடுப்பூசி திட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், COVID-19 தடுப்பூசியினால் ஏதாவது பக்க விளைவுகள் உண்டா என்பதை கண்காணிக்க, தரவுத் தளம் ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என, மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கின்றது.

அத்தடுப்பூசி திட்டம் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுவதை இதன் வழி உறுதிச் செய்ய முடியும் என அச்சங்கத் தலைவர் Datuk Dr Zainal Arifin Omar, Astro Awaniயிடம் தெரிவித்துள்ளார்.

COVID-19: அதிகமானோர் குணமடைந்தனர்!

நாட்டில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 525 பேர் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றுப் பதிவான ஈராயிரத்து 464 தினசரி COVID-19 சம்பவங்களைக் காட்டிலும், அவ்வெண்ணிக்கை அதிகமாகும்.

அதே சமயம், இந்த தினசரி சம்பவங்களை பொறுத்த வரை, ஜனவரி 13ஆம் தேதிக்குப் பிறகு, அவ்வெண்ணிக்கை 2ஆவது முறையாக மூவாயிரத்திற்கும் கீழ் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, COVID-19 தொற்றுக்காக சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் 49 ஆயிரத்து 490ஆக குறைந்துள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கை - ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கை திட்டவரைவு! 

2021-2030 தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கை திட்டவரைவை பிரதமர் இன்று அறிமுகப்படுத்தினார்!

நாடு COVID-19 பெருந்தொற்றை எதிர்நோக்கியுள்ள இக்காலக்கட்டத்தில் ஒருமைப்பாடு மிக அவசியமாவதாக Tan Sri Muhyiddin Yassin கூறினார்.

நாட்டிற்கு எது முக்கியம் என்பதை பகுந்தறிந்து நடந்துக் கொள்ளும் மக்களாக மலேசியர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் Muhyiddin தமதுரையில் கூறினார்.

இதனிடையே, COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கான கையேட்டை பிரதமர் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில், தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் விவரம் தொடங்கி அதன் அமுலாக்கம் வரையிலான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பப்படுகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather