Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Autism உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாதா? யார் சொன்னது!

Apr 06, 2021


autism உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாதா? யார் சொன்னது!

Autism எனப்படும் மதி இறுக்கம் உள்ளவர்களாலும் சாதாரண மனிதர்களைப் போல இயல்பாக வேலை செய்ய முடியும்!

வேலைச் சந்தையில் நுழைய, போதுமான திறன் இருந்தால், அவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் நிச்சயம் வழங்கப்படும் என்கிறார், மலேசிய தேசிய Autism சங்க உறுப்பினர் பத்மாவதி ராமன்.

autism உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாதா? யார் சொன்னது!

''சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இந்நிலை குறித்து கவலைப் படலாம். ஆனால் கவலயடைவதற்குப் பதிலாக, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவது சாலச் சிறந்தது.

 

முதல் விஷியம், மதி இறுக்கம் உடைய குழந்தைகளைப் பெற்றோர்கள் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும். நாம் எல்லோரையும் போல அவர்களுக்கு நிச்சயம் ஒரு தனித்திறமை இருக்க வேண்டும். அது என்னவென்ற கண்டறிந்து, அதில் அவர்களது திறமையை வளார்க்கச் செய்யுங்கள்'', என்றார்.

 

அது எந்த வகையில் அவர்களது எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என நாங்கள் கேட்ட போது..

 

''என் அனுபவத்தில், Autism குறைபாடு இருக்கும் பிள்ளைகள் தங்களின் எதிர்காலத்தை அருமையாக வடிவமைத்துள்ளதை நாங்கள் கண்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு, மன இறுக்கம் உடைய ஒரு குழந்தைக்கு, சமையல் கலையில் ஆர்வம் இருந்தால், அதனை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

காலப் போக்கில், அத்துறையில் அக்குழந்தை தனது ஆற்றலை வளர்த்துக் கொண்டு, அத்துறையில் வேலை செய்வது மட்டுமல்ல, சுயமாகவே உணவகம், உணவுக் கடைகள், ஃகேபே போன்றவற்றை நடத்தி வருவதை நாங்களே கண்கூடாது பார்த்திருக்கின்றோம்'' என்றார்.

 

autism உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாதா? யார் சொன்னது!

 

பெற்றொர்கள் ஆசிரியர்களைத் தவிர்த்து, Autism குறைபாடு உள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேற இந்த சமுதாயமும் தனது பங்கை ஆற்ற வேண்டும் என்பது பத்மாவதியின் கருத்து.

உதாரணமாக, முதலாளிமார்கள் இந்த மதி இறுக்கம் உடையவர்களை நன்கு புரிந்து கொள்ளுதல், அவர்களுக்கேற்ற வேலையைக் கொடுப்பது போன்றவற்றை செய்தால், அவர்களது வாழ்க்கைக்கு இது உதவியாக இருக்கும் என்றாரவர்.

நடப்பிலேயே மதி இறுக்கம் உள்ளவர்களுக்கு உணவுத் துறை, கணிணித் துறை, வியாபாரம் போன்ற துறைகள் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பது மறுப்பதற்கில்லை; அவர்கள் செய்ய வேண்டியது, அந்தந்த துறைகளில் தங்களின் ஆற்றலை  வளர்த்துக் கொள்வது மட்டுமே என பத்மாவதி மேலும் சொன்னார்.

இந்த Covid-19 காலகட்டத்தில் சாதாரண மக்களுக்கே வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கின்றது;

இந்நிலையில், மதி இறுக்கம் உள்ளவர்கள் நிலை மோசமாகி விடுமோ என்ற அச்சம் நம் சமுதாயத்தில் இருக்கக் கூடும்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பத்மாவதி Autism இருந்தால் என்ன? வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்'' என்கிறார் திருமதி பத்மாவதி ராமன்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather