Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

AstraZeneca பயனீடு விரைவில் முடிவு செய்யப்படும்!

Apr 09, 2021


astrazeneca பயனீடு விரைவில் முடிவு செய்யப்படும்!

நாட்டில் மேலும் ஐவர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர். 

அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக ஆயிரத்து 854 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சரவாக்கில் மிக அதிகமாக 555 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்து சிலாங்கூரில் 403 சம்பவங்களும் பினாங்கில் 176 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

astrazeneca பயனீடு விரைவில் முடிவு செய்யப்படும்!

AstraZeneca Covid-19 தடுப்பூசியை மலேசியா பயன்படுத்துமா இல்லையா என்பது கூடிய விரைவில் முடிவு செய்யப்படும்.

இன்னும் இரு வாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்புகள் சந்தித்து அதன் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தும் என தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்திருக்கிறார்.

அவ்வகைத் தடுப்பூசி மீதான ஆகக் கடைசி மற்றும் கூடுதல் தரவுகளை சுகாதார அமைச்சு மறு ஆய்வு செய்யும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான அவர் சொன்னார்.

வெளிநாடுகளில் AstraZeneca தடுப்பூசி செலுத்தப்பட்ட சிலருக்கு ரத்த உறைவு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.     

astrazeneca பயனீடு விரைவில் முடிவு செய்யப்படும்!

வயதான மற்றும் Covid-19 கிருமித் தொற்று எளிதில் பீடிக்கும் அபாயமுள்ள சுமார் 55 ஆயிரம் ஆசிரியர்கள் தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பட்டியலிடப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது கிருமித் தொற்றுப் பரவல் குறிப்பாக கல்விக் கழகங்களை உட்படுத்திய clusterகள் ஏற்படாமல் இருக்க உதவும் என நம்புவதாக கல்வியமைச்சு கூறியது.

இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் சேர்க்கப்படாத ஆசிரியர்களுக்கு மூன்று மற்றும் நான்காம் கட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.

astrazeneca பயனீடு விரைவில் முடிவு செய்யப்படும்!

மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி கோருவதற்கான விண்ணப்பங்கள் காவல் நிலையங்களில் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்ப பாரங்கள் பூர்த்தி செய்யப்படுவதோடு மாநில எல்லைகளைக் கடப்பதற்கான விவரங்களும் வலுவான ஆதாரங்களும் காண்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் நினைவுறுத்தினார்.

அவ்விவகாரத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அமலாக்கப் பணியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என Datuk Seri Ismail Sabri Yaakob எச்சரித்தார்.

அதே சமயம் விவரங்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது போலி கையொப்பமிடப்பட்ட விண்ணப்பங்களை வைத்திருக்கும் பொதுமக்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.  

astrazeneca பயனீடு விரைவில் முடிவு செய்யப்படும்!

Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறைகள் SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 94 பேர் கைது செய்யப்பட்டனர்.

வணிகத் தளங்கள் கூடுதல் நேரம் செயல்பட்டது அதிகமாகப் பதிவான குற்றமாகும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather