Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தடுப்பூசி போடும் விகிதம் குறைவா?

May 04, 2021


COVID-19 தடுப்பூசிக்கான கொள்முதல் அட்டவணையை அடிப்படையாக கொண்டே, தேசிய தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே, நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் விகிதம் குறைவாகவும், மந்தமாகவும் இருப்பதாக கூறப்படுவதை, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin மறுத்துள்ளார்.

covid-19 தடுப்பூசி போடும் விகிதம் குறைவா?

நாடு இதுவரை Pfizer, Sinovac, AstraZeneca என ஏறக்குறைய 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பெற்று விட்டதாகவும் Khairy சொன்னார்.

அதில் ஏறக்குறைய 14 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

ஆக, இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 75 விழுக்காடு என்பதையும் Khairy குறிப்பிட்டார்.

இவ்வேளையில், AstraZeneca தடுப்பூசியை தன்னார்வ அடிப்படையில் போட்டுக் கொள்ளும் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

இதற்கு முன் வழங்கப்பட்ட 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவு செய்துக் கொள்ளும் வாய்ப்பு மூன்றே மணி நேரத்தில் தீர்ந்து விட்டதை அடுத்து, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin அவ்வாறு கூறியுள்ளார்.

 

ஏப்ரல் மாதம் மட்டும் 62 ஆயிரம் கொரோனா சம்பவங்கள்!

COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் களைப்படைந்து, அதனால் SOPகளை பின்பற்றுவதில் அவர்கள் காட்டும் மெத்தனப் போக்கே, உலகளவில் கொரோனா சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன!

covid-19 தடுப்பூசி போடும் விகிதம் குறைவா?

அதே சமயம், பல தொழில் துறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன; சில நாடுகளின் எல்லைகளும் திறக்கப்பட்டு, பேரளவிலான கூட்டங்கள் நடத்தப்படுவதாலும் தான், அண்மைய காலமாக உலகளவில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க காரணங்களாகியிருப்பதாக, சுகாதார அமைச்சு கூறியது.

அதே சூழ்நிலை தான் மலேசியாவிலும் என கூறுகின்றார், சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah.

ஏப்ரல் மாதம் மட்டும் மலேசியாவில் ஏறக்குறைய 62 ஆயிரம் கொரோனா சம்பவங்கள் பதிவானதை அவர் சுட்டிக் காட்டினார்.

 

MCO வேண்டும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCOவை மீண்டும் அமுல்படுத்துமாறு, குறைந்தது இரு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று நடைபெற்ற மலேசிய பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தில் அவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் கூறினார்.

எனினும், அப்பரிந்துரை தொடர்பில், MCOவுக்கான தேவை குறித்து MKN முதலில் நன்கு ஆராயும் என அவர் தெரிவித்தார்.

இவ்வேளையில், நாட்டில் பதிவாகும் தினசரி COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்து 500க்கு குறைந்துள்ளது.

covid-19 தடுப்பூசி போடும் விகிதம் குறைவா?

அதில் ஆக அதிகமாக 637 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன.

அதற்கடுத்த நிலையில், Kelantanனில் 401 சம்பவங்களும், சரவாக்கில் 356 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அத்தொற்றுக்கு மேலும் 18 பேர் பலியானதை அடுத்து, மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 551ஆக அதிகரித்ததாக சுகாதார அமைச்சு கூறியது.

இன்னும் 30 ஆயிரத்து 753 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



i-Sinar தொகை!

மே மாதத்திற்கான i-Sinar தொகை நேற்று தொடங்கி மே 11ஆம் தேதி வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்தாரர்களின் வங்கி நடைமுறைகளுக்கு ஏற்ப அந்த தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படும் என EPF கூறியது.


 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather