Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அதிகமான இளையோர் COVID-19 தொற்றுக்கு ஆளாகின்றனர்!

May 09, 2021


COVID-19 பரவலை முறியடிக்க, வீட்டிலேயே இருக்குமாறு சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையென்றால், மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க போதுமான இட வசதி இன்றி குறிப்பாக ICU பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை வரலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

அதிகமான இளையோர் covid-19 தொற்றுக்கு ஆளாகின்றனர்!

அப்படியே ஒருவேளை, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசர மற்றும் அவசிய தேவைகள் இருந்தால், சுவாசக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை கழுவுவது உள்ளிட்ட அனைத்து SOPகளையும் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, அவர் தமது Twitter உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதனை பதிவிட்டிருந்தார்.

மார்ச் மாத தொடக்கத்தில் சமூகம், கல்வி, சமயம் சார்ந்த நடவடிக்கைகள் தொடங்க அனுமதிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் Dr Noor Hisham சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனிடையே உருமாறிய கொரோனா குறித்து பேசிய Dr Noor Hisham, இளைஞர்கள் தான் அத்தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

அதிகமான இளையோர் covid-19 தொற்றுக்கு ஆளாகின்றனர்!

இவ்வாண்டு தொடங்கி இதுவரை 20 முதல் 29 வயதிலானவர்களை உட்படுத்தி, ஆயிரத்து 531 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

30 முதல் 39 வயதிலானவர்களில் ஏறக்குறைய ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு உருமாறிய COVID-19 தொற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களில், பலருக்கு சிகிச்சை பலனளிக்காமல் போகும் கடுமையான சூழ்நிலைகள் நிலவி வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்வகை உருமாறிய கொரோனா இளையோரை தாக்கும் போது, அதன் விளைவுகள் மிக மோசமாக இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

எனவே தான், கொரோனா பரவலை முறியடிக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

 

4 வாரங்களுக்கு மாநிலம் - மாவட்ட கடக்க அனுமதியில்லை!


அதிகமான இளையோர் covid-19 தொற்றுக்கு ஆளாகின்றனர்!

நாளை தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரைநாடு முழுவதும் காவல் துறையின் அனுமதியின்றி மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்துப் பயணிக்க முடியாது!

அதிகமான இளையோர் covid-19 தொற்றுக்கு ஆளாகின்றனர்!

நாட்டில் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிரித்து வருவதை கருத்தில் கொண்டு, 4 வாரங்களுக்கு அத்தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அறிவித்துள்ளார்.

நாட்டில் ஆகக் கடைசியாக 4 ஆயிரத்து 519 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

அதில் ஆக அதிக சம்பவங்களை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் நீடிக்கின்றது.

சிலாங்கூரில் மட்டும், ஆயிரத்து 722 கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்ட வேளை, அதற்கடுத்து கோலாலம்பூரும், சரவாக்கும் உள்ளன.

மேலும் 25 பேர் அத்தொற்றுக்குப் பலியானதை அடுத்து, மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 657ஆக அதிகரித்தது.

இன்னும் 36 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather