← Back to list
கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்து விடலாம்!
Jun 20, 2021
நாடு முழுவதும் நேற்றிரவு வரை 56 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு Covid-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
15 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக இரு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
கோலாலம்பூரில் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வேளையில் நேற்று ஒருநாளில் மட்டும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இவ்வாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah அவ்வாறு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
எனினும் Covid-19 தடுப்பூசி போடப்படுவது அதிகரிக்கப்படுவதைப் பொருத்து அது அமைந்திருக்கும் என அவர் சொன்னார்.
மலேசியர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக Covid-19 னுக்கு எதிராகப் போராடி உடல் மற்றும் மனோ ரீதியில் களைப்படைந்து விட்டதாகவும் Noor Hisham கூறினார்.
MyVac எனும் Malaysia Vaccine Support Volunteers திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் பேர் தன்னார்வலர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.
Covid-19 பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் முன்வரிசைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு உதவ அவர்கள் கைகொடுப்பதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு கூறியது.
அவர்களில் நாலாயிரத்து 500 பேர் நாடு முழுவதும் உள்ள 330 தடுப்பூசி போடும் மையங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் முழு முடக்கம் அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் வணிக நடவடிக்கைகளை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அதன் தொடர்பில் முன் வைக்கப்படும் கருத்துகளைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாக பிரதமர் துறையின் பொருளாதாரப் பிரிவுக்கான அமைச்சர் தெரிவித்தார்.
நடப்பில் பெரும்பாலான வணிகங்கள் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா மிருகக்காட்சி சாலை பொதுமக்களின் நன்கொடையை நாடியுள்ளது.
முழு முடக்கம் காரணமாக தற்லிகமாக மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள விலங்குகளைப் பராமரிக்கவும் நடவடிக்கை செலவினங்களுக்காகவும் மாதமொன்றுக்கு 6 லட்சம் ரிங்கிட் தேவைப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆசிரியர்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காண கல்வியமைச்சு சிறப்புத் தேர்வாக ஒரே முறையாக 18 ஆயிரத்து 700க்கும் அதிகமான ஆசிரியர்களைப் பணியமர்த்தவுள்ளது.
காலி இடங்களுக்கான விளம்பரம் அடுத்த மாதம் வெளியிடப்படும்; அக்டோபர் மாதம் முதல் பணியமர்த்தப்படுவது தொடர்பான விவரங்கள் தெரியப்படுத்தப்படும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather