Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளம்: 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

Jan 05, 2021


நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களில் ஏறக்குறைய 333 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அம்மையங்களுக்கு மாற்றப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அவர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் அல்லது 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

பகாங்கில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக Maran திகழ்கின்றது; அங்கு மட்டும் 4 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கடுத்து Kuantan, Lipis, Raub, Jerantut, Temerloh ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எதிர்பாரா ஒன்று!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் சற்றும் எதிர்பாராத ஒன்று என கூறுகின்றார், ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் R. Vidyananthan.

குறிப்பாக ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனோரீதியான ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் ராகா செய்தியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் இப்பேரிடர் ஏற்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் உணவு விநியோகிப்பு முறைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வித்தியானந்தன் சொன்னார்.

அதே சமயம், அம்மையங்களில் உள்ள கழிவறைகள் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுவதும் உறுதிச்செய்யப்படுவதாக அவர் கூறினார்.

அம்மையங்களில் மக்களுக்கு உதவிகள் செய்து வரும் தன்னார்வலர்கள் COVID-19 மீதான SOPகளை தொடர்ந்து பின்பற்றி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஜொகூரில் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான Kota Tinggiயில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களை பிரதமர் Tan Sri Muhyiddin Yassin இன்று பார்வையிடவிருக்கின்றார்.

அம்மாநிலத்தில் ஐயாயிரத்து 252 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால்.....

COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுபவர்கள்,  SOPகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகின்றார், மலேசியப் பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar.... 

அத்தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கவனமுடன் இருக்கும் அதே வேளை, உடல் நலம் மோசமடையும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக சுகாதார அமைச்சுக்கு அத்தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அறிகுறிகள் ஏதும் காட்டாமல் அத்தொற்றுக்கு ஆளாகியிருப்பவர்கள் அல்லது மிதமான அறிகுறிகள் கொண்டவர்களை தத்தம் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிப்பது பற்று சுகாதார அமைச்சு பரிசீலித்து வருவது தொடர்பில் அவர் பேசினார்.

மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, இவ்வாறு பரிசீலிக்கப்படுகின்றது.

PTPTN: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகை நீட்டிப்புக்கு, தகுதிப் பெற்றவர்கள், இன்று தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

COVID19 ஏற்படுத்திய தாக்கத்தால் இன்னும் பலர் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சு முன்னதாக கூறியது. 

அதற்கு கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை; PTPTN அகப்பக்கத்தின் வாயிலாக சலுகை நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather