Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

PdPR: பரிந்துரைகளும் கருத்துகளும் தேவை!

Jan 31, 2021


Covid-19 பரவல் காணப்படும் இக்காலக் கட்டத்தில், அனைத்து மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கு உதவும் பரிந்துரைகளையும் கருத்துகளையும் முன் வைக்குமாறு பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாடாளுமன்றத்தின் கல்விக்கான சிறப்புத் தேர்வு செயற்குழு அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்றல்-கற்பித்தலை மேற்கொண்டு வருவது சவாலாக இருப்பதால் அவர்கள் கல்வியில் பின்தங்கி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதனை அடுத்து அச்செயற்குழு ஆக்ககர நடவடிக்கைகளை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போதைக்கு, PdPRரை மேற்கொள்வதில் இணையத் தொடர்பு பிரச்னை, போதிய மின்னியல் தொடர்பு சாதனங்கள் இல்லாதது ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக முன் வைக்கப்பட்டுள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறுவோருக்கான அபராதத் தொகையை உயர்த்துவதற்கான தருணம் வந்து விட்டதாக அரச மலேசிய காவல் துறை தெரிவித்திருக்கிறது.

நாட்டில் நாள்தோறும் பதிவாகும் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தேசிய காவல் படைத் தலைவர் அவ்வாறு கூறியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் SOPயைப் பின்பற்றாததற்காக ஆயிரக்கணக்கான சம்மன்கள் வெளியிடப்படுகின்றன.

பொதுமக்கள் SOPக்களைக் கடைப்பிடிப்பதில் அலட்சியமாக இருப்பதை இது காட்டுவதாகக் குறிப்பிட்ட IGP, நடப்பில் உள்ள ஆயிரம் ரிங்கிட் அபராதம் போதுமானதாக இல்லை என்றார். 

பிப்ரவரி இரண்டாம் தேதியில் இருந்து அந்நிய தொழிலாளர்களுக்கான Covid-19 மருத்துவ பரிசோதனையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஆள்பலத் துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் நாலாயிரத்து 735 பேருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Covid-19 தொடர்பில் நேற்று நாடு முழுவதும் 16 புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டன.

அவற்றில் 13 வேலையிடங்களை உட்படுத்தியவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

ஜொகூர், சிலாங்கூர், KL, பஹாங், சபா ஆகிய மாநிலங்களில் அந்த clusterகள் கண்டறியப்பட்டுள்ளன.

திரங்கானுவில் ஆசிரியர் ஒருவருக்கும் மாணவர் ஒருவருக்கும் Covid-19 பீடித்துள்ளதைத் தொடர்ந்து இடைநிலைப் பள்ளியொன்றை இரு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து, முக்கியத் தேர்வுக்கு அமரும் மாணவர்களுடனான நேரடி போதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather