Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிலாங்கூரில் பேரளவிலான COVID-19 பரிசோதனை!

May 05, 2021


மே 8ஆம் தேதி தொடங்கி, சிலாங்கூரில் பேரளவிலான COVID-19 இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநில அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

சிலாங்கூரில் பேரளவிலான covid-19 பரிசோதனை!

சிலருக்கு கொரோனா தொற்று இருந்தும் அதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை; 

சம்பந்தப்பட்டவர்கள், தங்களையும் அறியாமல் கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவ காரணமாகி விடுகின்றனர்.

அண்மைய வாரங்களாக சிலாங்கூரில் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்பதால், பேரளவிலான கொரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.

முதலாவதாக, Kajang மற்றும் Semenyihவில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும் என Datuk Seri Amirudin Shari கூறினார்.

ஆகக் கடைசியாக நாட்டில் பதிவான மூவாயிரத்து 120 கொரோனா சம்பவங்களில், 675 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

சிலாங்கூரில் பேரளவிலான covid-19 பரிசோதனை!

இவ்வேளையில், சிலாங்கூரில் COVID-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாகநாளை தொடங்கி மே 17 ஆம் தேதி, 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுலுக்கு வருகிறது.

கிள்ளான், Kuala Langat, Hulu Langat, Petaling, Gombak, Sepang ஆகியவை அம்மாவட்டங்கள் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அறிவித்தார்.

MCO-வின் போது மாவட்ட எல்லைகளைக் கடக்கவும் அனுமதி இல்லை.

Kuala Selangor, Hulu Selangor, Sabak Bernam ஆகியவற்றில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO நீடிக்கும் என்றும் அமைச்சர் சொன்னார்.

 

Khairy: தடுப்பூசி போட்டுக் கொள்ள காவல் துறை அனுமதி கடிதம் தேவையில்லை! 

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மாவட்ட எல்லைகளை கடக்க வேண்டியுள்ளவர்கள், காவல் துறையின் அனுமதி கடிதம் பெற வேண்டிய அவசியமில்லை!

சிலாங்கூரில் பேரளவிலான covid-19 பரிசோதனை!

அவர்கள் MySejahtera செயலி, அகப்பக்கம் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட தடுப்பூசிப் பதிவு ஆதாரத்தை காட்டினாலே போதுமானது என, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.

சிலாங்கூரில் 6 மாவட்டங்களில் MCO அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, Khairy இவ்விளக்கத்தை கொடுத்துள்ளார்.

 

இடையூறாக நினைக்காதீர்கள்!

COVID-19 பெருந்தொற்றை வேரறுக்க அரசாங்கம் அறிவிக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை யாரும் இடையூறாக கருத வேண்டாம்!

அதுவே, அனைத்து மக்களுக்கும் தாம் கூற நினைக்கும் ஆலோசனை என்கிறார், மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் பேராசிரியர் Datuk DR M.Subramaniam.

ஆகக் கடைசியாக சிலாங்கூரில் ஆறு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO-வை அவர் வரவேற்றுப் பேசினார்.

நோன்புப் பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், இந்த MCO அமுலாக்கத்தை சிலர் சுமையாக கருதலாம்.

ஆனால், கொண்டாட்டங்களை விட உடல் நலம் முக்கியமென்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் Dr Subramaniam கேட்டுக் கொண்டார்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather