
சிலாங்கூர் Bandar Utama பள்ளிக்கூடத்தில், சக மாணவியைக் கொலை செய்ததாக, உயர் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 15 வயது மாணவன் மறுத்துள்ளான் !
அடுத்த மாதம் அவ்வழக்கு மறுசெவிமடுப்புக்கு வரும்.
கடந்தாண்டு ஆக்டோபரில், சம்பந்தப்பட்ட பள்ளி கழிவறையில், சம்பந்தப்பட்ட 16 வயது மாணவி கொலையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அக்காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் பரவலாகின.
---------
பள்ளிகளில், காசநோய் அச்சுறுத்தல் கட்டுப்பாட்டில் உள்ளது !
கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து அந்நோயின் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
முன்னதாக, ஜொகூர், கெடா உட்பட 7 மாநிலங்களில், 10 காசநோய் கிளஸ்டர்கள் கண்டறியப்பட்டன.
---------
இதனிடையே, ஜோகூரில் காச நோய் தொற்றுக்குள்ளான 7 மாணவர்களில் 3 பேர் குணமடைந்துள்ளனர் !
மீதமுள்ள நான்கு பேருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------
இந்திய சமூகத்தைக் குறித்து, முகநூலில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட Cikgu Chandra கைது செய்யப்பட்டுள்ளார் !
அவரது நடவடிக்கை குறித்து பல இந்தியர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, அவர் கைதானார்.
------------
சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பினாங்கில் அடுத்த ஒரு வாரம், சுமார் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது !
அதனால், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.