“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே... தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே...” நெஞ்சை உருக்கும் பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம், அப்பாவின் நினைவுகள் அனைவரது மனதிலும் நிழலாடும். தன் பிள்ளை கருவில் சுமப்பது தாயென்றால், தோல்மீது சுமப்பது தந்தை தான்! தன் மனைவி, பிள்ளைகள், குடும்பம் என தன் வாழ்நாளையே அவர்களுக்காக அர்ப்பணிப்பவரே தந்தை எனும் தலைவன். அத்தலைவனை கௌரவிப்பதற்காக தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அவர்களின் முன்னேற்றத்திற்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. “அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடன் நீ அறிவை வாங்கலாம்” என்ற பாடல் வரிகள் மூலம் அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை என்பதை கவிஞர் கண்ணதாசன் சுட்டிக்காட்டியிருப்பார்.
Advertisement

அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதுதானே தந்தையின் சிறப்பு. தன் உழைப்பாலும், உணர்வாலும் அன்பென்னும் குணத்தாலும் தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தோழனாய், தலைவனாய், நாயகனாய்த் திகழ்பவர் தந்தை. “நான் பட்ட கஷ்டம், என் பிள்ளையும் படக்கூடாது என்று வாயாற பேசி, மனதார உழைக்கும் அந்த அன்பு” நம்மை என்றும் அரவணைத்து காக்கும். அவர் செய்த தியாகங்களையும் அனுபவித்த கஷ்டங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு!

இந்த நாளில் அனைத்து தந்தையருக்கும் ராகாவின் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.